பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
டி
1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல.

2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல.

3. தமிழின் முப்பெரும் புலவர்களான இளங்கோவோ, வள்ளுவரோ, கம்பனோ பிராமணர் அல்ல.

4. “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவன் அவன்கண் படுமே” இது சங்கப்பாடல்.

5. பிராமணர்களிடம் என்றும் அதிகாரம் இருந்ததில்லை. அவர்கள் மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.

6. மெய்கண்ட தேவரோ, இராமலிங்க அடிகளாரோ பிராமணர் அல்லர்.

7. தமிழுக்கு இலக்கண நூற்களை எழுதியவர்களில் பலர் பிராமணர்கள் அல்லர்.

8. குறிப்பாக தமிழ்நாட்டை 1947க்கு முன் நானூறு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லது இஸ்லாமியர்கள் (பெரும்பாலான பகுதிகளில்). இவர்களும் பிராமணர்களுடன் சேர்ந்து மற்றவர்களைத் தடுத்தார்களா?

9. இருமொழிகளில் புலமை பெற்று துபாஷிகளாக வேலைபார்த்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள் அல்லர்- வெள்ளாளர்கள்.
.
10. வேதத்தை முதல் மூன்று வருணத்தவர்தாம் படிக்கலாம் என்ற விதி இருந்தது உண்மை. ஆனால் உபநிடதங்கள் 17ம் நூற்றாண்டிலேயே மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேதங்கள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன.
11. வேதங்களில் சொல்லப்பட்டவை குப்பை என்பது பெரியாரிய நாசி இனவெறியர்களின் நிலைப்பாடு. குப்பையைப் படிக்க வேண்டாம் என்று பிராமணர்கள் சொன்னால் அதனால் இவர்களுக்கு எந்த விதத்தில் குறைபாடு?

12. இவர்கள் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்து விடுகிறார்கள். இஸ்லாமில் எல்லோரும் எல்லாவற்றையும் படிக்கலாம். எந்தத் தடையும் இல்லை. ஆனால் இஸ்லாமியர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஏன் அதிகம் இருக்கிறார்கள்? இன்றுவரை ஏன் இருக்கிறார்கள்? அவர்களைப் படிக்க விடாமல் தடை செய்தது பிராமணர்களா?

12. காரணம் மிக எளிமையானது. படிப்பின்மைக்கும் ஏழ்மைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. ஆனால் தொழிற்புரட்சிக்கும் முன்னால் பணம் இருந்தவர்களும் படிக்க வேண்டும் என்ற நினைப்போடு இருந்ததாகத் தெரியவில்லை. ‘படித்து என் பையன் செய்யப்போகிறான்?’ என்ற கேள்வி எனக்குத் தெரிந்து கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. பரவலான எழுத்தறிவினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்ற உணர்வு வந்தது தொழிற்புரட்சிக்கு பின்னால்தான். இந்தியாவில் தொழிற்புரட்சியின் தாக்கம் மிகவும் பின்னால்தான் வந்தது. மேலைநாடுகளில் அதற்கு முன்னாலேயே மறுமலர்ச்சி ஏற்பட்டு விட்டது. அச்சிட்ட புத்தகங்கள் பரவலாகப் படிக்கப்பட்டது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால். இந்தியாவில் அச்சிட்ட புத்தகங்கள் பரவலாகப் பதிக்கப்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில். நம் மறுமலர்ச்சி அப்போதுதான் ஏற்பட்டது. படிப்பின் முக்கியத்துவம் நமக்குப் புரியத் துவங்கியது அப்போதுதான். அது முதலில் பிராமணர்களுக்குத் தெரிந்தது. அதனால் பிராமணர்களைக் கழுவில் ஏற்ற முடியாது.

13. கல்லூரிகளில் பிராமணர் அல்லாதவர் சேரக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. பிராமணர்கள் பலர் சேர்ந்தார்கள். படிப்பின் முக்கியத்தை அவர்கள் புரிந்து கொண்டதால் சேர்ந்தார்கள். நிலவுடமைச் சமூகத்திலிருந்து வெளியேறினால் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் படிப்பு இலவசமாக அளிக்கப்படவில்லை. நிலங்களை விற்றுத்தான் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள்.

14. பிராமணர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் சொல்லமாட்டேன். நிச்சயம் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நிலைமை அவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. மக்களாட்சி வந்தவுடன் நிலைமை சீரடைந்து விட்டது என்பதும் உண்மை. மக்களாட்சி வேண்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரியார் என்பதும் உண்மை.

திராவிட இயக்கம் ஓர் அப்பட்டமான நாசி இயக்கம். ஒரு சமூகத்தையே நூறு ஆண்டுகளாகச் சாடிக் கொண்டிருப்பதற்கு அசாத்தியமான அயோக்கியத்தனம் வேண்டும். தடித்தனம் வேண்டும். இவை திராவிட இயக்கத்திற்கு இன்றுவரை இருக்கின்றன.எந்தக் கூச்சமும் இல்லாமல் பெரியார் சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் இயக்கம் அது. அதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்களைச் சுரண்டிப் பார்த்தால் அவர்கள் நாசிகளாகத்தான் இருப்பார்கள் அல்லது பெரியார் திடலில் கூலி வேலை செய்பவர்களாக இருப்பார்கள் என்பதுதான் அவமானகரமான உண்மை.

3 thoughts on “பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?”

  1. என் ஒரு பதிவில் (மார்ச் 1, 2012) நான் எழுதிய ஒரு பகுதி இது:

    //பொதுவாக இட ஒதுக்கீடு என்று வரும்போது 2,000 ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டது என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வரும். அதில் எந்த ஒரு நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    கல்வி என்று இங்கு சொல்லப்படுவது வேலை வாய்ப்புக்கான கல்வி என்றால், அது பிரிட்டிஷ் ஆட்சிமுறை கொண்டுவந்த நவீனக் கல்விதான். அதற்குமுன் முஸ்லிம்கள், மராட்டியர்கள், தெலுங்கர்கள் என்று பலர் தமிழகத்தை ஆண்டுவந்தனர். அதற்குமுன் தமிழ் அரசர்கள். இவர்கள் எவர் காலத்திலும் தமிழகத்தில் பிராமணர்கள் தவிர யாரும் கல்வியே கற்கக்கூடாது என்று இருந்ததாகத் தெரியவில்லை.

    18-ம் நூற்றாண்டு வரையிலும் நமக்குக் கிடைத்த புலவர்களின் பெயர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு சாதியினரும் இருப்பதாகத் தெரிகிறது. அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு புத்தகத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைப் பார்த்தால் (19-ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்) அதில் பார்ப்பனர் தவிர்த்துப் பிறர் எழுதியுள்ளவைதான் கிட்டத்தட்ட அனைத்துமே.

    16-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை, சைவ மடங்களே பெரும் கல்விக்கூடங்களாக விளங்கின. அவற்றில் பார்ப்பனர்கள் படித்தனர் என்றாலும் பார்ப்பனர் அல்லாதோரே பெருமளவு இருந்தனர். தலைமைப் பதவி பார்ப்பனர் அல்லாதோரிடமே இருந்தது.

    எனவே 2,000 ஆண்டு கல்வி மறுக்கப்பட்ட என்ற பரப்புரையைத் தவிர்த்துத்தான் இதனைப் பார்க்கவேண்டும். நிச்சயமாக பல சாதியினர் கல்வி கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தால் அது பிராமணர்கள் குற்றம் இல்லை. வேதம் தவிர்த்த தமிழ்க் கல்வி, எழுதுதல், படித்தல், தமிழ் இலக்கணம், பா இயற்றுதல் போன்ற பலவும் புழக்கத்தில் இருந்தன. சித்தர்கள் அனைவருமே பார்ப்பனர் அல்லாதோர்தான். அவர்கள் அனைவரும் சுயம்புவாகவா கற்றுக்கொண்டனர்? 19-ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர் ராமலிங்க வள்ளலார், பார்ப்பனர் அல்லாதவர். அவருடைய சீரிய ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் முதலியார்கள். தமிழகத்தின் செட்டியார்கள் பெரும் கல்விப் பரம்பரையையும் அத்துடன் அதற்கு இணையான செல்வத்தையும் கொண்டிருந்தவர்கள்.

    அதேபோல தமிழகத்தில் நவீனக் கல்வியை அறிமுகப்படுத்திய கிறிஸ்துவ மிஷனரிகளின் கல்விக்கூடங்களில் பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்கலாம் என்று எந்த நிலையும் இருக்கவில்லை. இப்படித்தான் கல்லூரிகளிலும். ஆனாலும் அதிகமாக இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம் என்று தெரிகிறது. (எ.கா: சட்டநாதனின் தன்வரலாறு புத்தகத்தில் வரும் பல பகுதிகள். காலச்சுவடு வெளியீடு.)

    இதன் தொடர்ச்சியாக, பிரிட்டிஷ் ஆட்சியில் வேலைகள் என்று வந்தபோது பிராமணர்களே பெருமளவு வேலைகளைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது புள்ளிவிவரம் காட்டும் உண்மை. இதற்கான காரணங்கள் பல. 2,000 ஆண்டு கல்வி மறுப்பு என்ற பொய் அதற்கான காரணமாக இருக்கவேண்டியதில்லை.

    பிராமணர்கள் ஆதிக்கத்தை எதிர்க்கப் புகுந்த திராவிட இயக்கம் மிக விரைவில் பார்ப்பன சாதியினர்மீது வெறுப்பைக் கக்கும் இயக்கமாக ஆகியது. இது இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் திராவிட இயக்கத்தில் மிகப்பெரிய குற்றமாக நான் காண்பது. வெறுப்பை மட்டுமே முன்வைத்துச் செய்யப்படும் வியாபாரம் வெகுநாள் தங்காது.//

    http://www.badriseshadri.in/2012/03/x.html

    Like

  2. The Brahmin youths were trained to give importance to studies from childhood. They never wasted their time on the streets participating on non productive activities. They were therefore successful.

    Their success has become an eyesore to the Dravida parties. They are jealous of the success of the Brahmins and ganging up against the Brahmins under the flag of EVR.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s