The Joy of Admiring a Ravi Varma

We have in our Delhi flat a small, strange, black & white print of Krishna titled ‘Shri Krishna in Om’. There is nothing remarkable about this print, except that, on the right side of the picture, at the bottom, there is a legend which says: ‘S S Brijbasi & Sons, Bunder Road, Karachi.’ On the… Continue reading The Joy of Admiring a Ravi Varma

My speech on Dharampal’s Beautiful tree

23 March 2016 I am going to speak today on Dharampal seminal work The Beautiful Tree – Indigenous Indian Education in the 18th century. Until he came out with this piece, the Macaulay’s system was being roundly criticized but without any substantive proof that it replaced a much better system. Dharampal, as far as I… Continue reading My speech on Dharampal’s Beautiful tree

பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை: பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின்… Continue reading பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

சமணர்களும் சமத்துவமும்

தமிழகத்தில் திராவிடத்தின் சார்பில் எழுதும் பல பேராசிரியர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் அல்லது விலை போனவர்கள் என்று நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஒரு முழுச் சோம்பேறிப் பேராசிரியர் வள்ளுவரைத் திராவிடத்தாரகை என்ற அளவில் பேசியிருக்கிறார். அதானால்தான் பெரியார் அவரை ஓரளவு ஏற்றுக் கொண்டாராம். பெரியார் அதிகம் படிக்காதவர். அதுவும் தமிழ் இலக்கியத்தை முழுவதும் வெறுத்தவர். அவர் ஏற்றுக் கொண்டதால் அது திருவள்ளுவருக்குப் பெருமை என்று பெரியார் திடலில் கூலி வேலை பார்க்கும் அடியாட்கள்தாம் சொல்ல… Continue reading சமணர்களும் சமத்துவமும்

தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!

(சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. தினமலர் வெளியிடும் 'பட்டம்' இதழில் 4 நவம்பர் 2019ல் வந்தது) நம் எல்லோருக்கும் பூமிக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிய நிச்சயம் ஆர்வம் இருக்கும். மர்மக்கதைகள் படிப்பவர்களுக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கலாம் என்று தோன்றும். சிலருக்கு புதையல் கிடைக்கும் என்ற ஆசை இருக்கும். நீங்களும் தோண்டிப் பார்க்கலாம். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு தோண்டிப் பார்க்கலாம். தோண்டும் போது என்ன கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது. நான் சிறுவனாக இருக்கும் போது… Continue reading தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!

அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?

தேனீக்கூடு! நான் கீழடியைப் பற்றி எழுதியிருப்பவையும் பேசியிருப்பவையும் தேனீக்கூட்டைக் கலைத்து விட்டன. பல தேனீகள் என்னையும் என்னை ஆதரிப்பவர்களையும் கொட்டுவதற்குப் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை -கீழடியின் முதல் இரண்டு கட்டங்களையும் ஆராய்ந்த திரு அமர்நாத் உட்பட. நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நான் அவர்கள் நான் சொன்னதாகச் சொல்லுபவை நான் சொன்னவற்றிற்கு நேர் எதிரானவை! எலும்புக் கூடுகள்! நான் கீழடியில் எலும்புக் கூடுகள் கிடைக்கவில்லை என்று… Continue reading அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?

நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி

நேற்று நடந்த விவாதத்தில் நான் திரு வெங்கடேசனைக் குறை சொல்ல மாட்டேன். அவர் அரசியல்வாதி. கீழடி அரசியல் அவருக்குப் பிழைப்பு. ஆனால் ராஜவேலு அவர்கள் தொல்லியல் துறையில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவர் பேச்சுத்தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கரிமப்பகுப்பாய்வு பற்றிய இப்படி ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்? நான் என்னுடைய வாதத்தை மறுபடியும் தெளிவாக வைக்கிறேன். 1. கீழடியில் பகுப்பாய்வு செய்யப்பட்டது கரித்துண்டு. கரித்துண்டின் வயது என்ன என்பதுதான் கண்டறியப்பட்டது.… Continue reading நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி

பிராமி – சில கேள்விகள்

பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன - சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள்.… Continue reading பிராமி – சில கேள்விகள்

கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன்… Continue reading கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?