அழகர் கோவில் பௌத்த வழிப்பாட்டுத்தலமாக இருந்ததா?

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது திரு தொ. பரமசிவன் எழுதிய ‘அழகர் கோவில்’ புத்தகத்தைப் பற்றிய முழு விமரிசனம் அல்ல. தமிழில் வந்த புத்தகங்களில் முக்கியமான ஒன்று அது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கடுமையான உழைப்பின் விளைவு அது. பல தரவுகளோடு எழுதப்பட்டிருக்கிறது. என் எதிர்வினை அவருடைய புத்தகத்தில் ஒரு சிறிய பகுதியைப் பற்றியது. அழகர் கோவில் பௌத்த வழிபாட்டுத்தலமாக இருந்தது என்பதற்கு அவர் சொல்லும் ஆதாரங்கள் வலுவற்றவை என்பதை நிறுவுவதே இப்பதிவு.… Continue reading அழகர் கோவில் பௌத்த வழிப்பாட்டுத்தலமாக இருந்ததா?

My Review of Mr. Balakrishnan’s book – Journey of A Civilization

(The review appeared on 1 May 2020 in The Federal) R Balakrishnan - Journey of a Civilization Mr Balakrishnan’s  Journey of a Civilization is without doubt a publishing milestone. The book is impeccably produced and it has great charts and photographs. The style of the author is lucid and uncomplicated. He also has a delectable… Continue reading My Review of Mr. Balakrishnan’s book – Journey of A Civilization

திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு எதிர்வினை

திரு மகுடேசுவரனுக்கு பதில் சொல்வதற்கு முன்னால் சிலவற்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். (காலச்சுவடு செப்டம்பர் 2019ல் வெளியான என் கட்டுரையின் சில பகுதிகள் இங்கு இடம் பெறுகின்றன.) ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில்… Continue reading திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு எதிர்வினை

தெலுங்கு தமிழிலிருந்து ‘கிளைத்த’ மொழியா? – திரு மகுடேசுவரனுக்குப் பதில்

திரு மகுடேசுவரனின் தமிழ்ப் புலமை மீது எனக்கு என்றும் மதிப்பு உண்டு. ஆனால் தமிழ்ப் புலமையும் மொழியியலில் தேர்ச்சியும் வெவ்வேறானவை. மொழியியலின் அடிப்படைக் கருத்துகள் அறிவியல் சார்ந்தவை. நம்முடைய விருப்புகளையும் வெறுப்புகளையும் சார்ந்தவை அல்ல. மொழியியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் தமிழ் இலக்கியம் தமிழ் பேசப்பட்ட நிலப்பரப்பைப் பற்றிச் செய்திருக்கும் பதிவுகளைப் பார்ப்போம். தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரம் "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து" என்று சொல்கிறது. புறநானூறு "தென்குமரி வட… Continue reading தெலுங்கு தமிழிலிருந்து ‘கிளைத்த’ மொழியா? – திரு மகுடேசுவரனுக்குப் பதில்

ராமானுஜர் – நம்பிக்கையும் வரலாறும்

(இது நான் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ராமானுஜர் நாடகத்திற்கு எழுதிய முன்னுரை. கிளாசிக் வரிசையில் காலச்சுவடு வெளியீடாக இந்த ஆண்டு (2023) வெளிவந்திருக்கிறது.) நான் இந்திரா பார்த்தசாரதி அவர்களை என் தந்தையைப் போல மதிக்கிறேன். என் தந்தையிடம் எத்துணை மரியாதையும் அன்பும் வைத்திருந்தேனோ அதே மரியாதையையும் அன்பையும் இபா அவர்கள் மீது வைத்திருக்கிறேன். 1999 ஆண்டின் சரஸ்வதி சன்மான் விருது அவருடைய ‘ராமானுஜர்’ நாடகத்திற்கு கிடைத்த செய்தி தெரிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது. அவர் கூடவே… Continue reading ராமானுஜர் – நம்பிக்கையும் வரலாறும்

ஒன்பதாம் திருமொழி – 2

பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!வம்பக் களங்கனிகாள்! வண்ணப் பூவை நறுமலர்காள்!ஐம்பெரும் பாதகர்காள்! அணி மாலிருஞ்சோலை நின்றஎம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே? செழிப்பான சோலையில் வாழ்கின்ற குயில்களே! மயில்களே! அழகிய கருவிளைப் பூக்களே! புதிய களாப்பழங்களே! அழகிய நிறத்தையும் மணத்தையும் உடைய காயாம்பூக்களே! ஐந்து பெரும் பாதகர்களே! உங்களுக்கு அழகிய திருமாலிருஞ்சோலையில் இருக்கும் பெருமானுடைய மேனி நிறம் எதற்கு? முதற்பாட்டில் ஆண்டாளுக்கு பார்க்கும் இடம் எல்லாம் சிவப்பாகத் தெரிந்தது. இப்போது கண்ட இடங்களில் எல்லாம்… Continue reading ஒன்பதாம் திருமொழி – 2

ஒன்பதாம் திருமொழி -1

மேகங்கள் ஏதும் பேசவில்லை. ஆண்டாள் செய்வதறியாது சிறிது நேரம் திகைக்கிறார். சுற்றும் முற்றும் பார்க்கிறார். உலகம் அதன் வழியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்களை நம்ப முடியாது. ஆனால் ஊர்வன, பறப்பன, அசைவன போன்றவற்றை இன்னும் நம்பலாம். செய்யாமல் போகாவிட்டாலும் செய்வோம் என்று சொல்லி விட்டு ஏமாற்றாது என்று அவர் நினைக்கிறார். அடுத்த இருபது பாடல்களும் ஆண்டாள் காலத்தில் அவரைச் சுற்றியிருந்த இயற்கையின் படைப்புகளுடன் பேசுவதாக அமைந்திருக்கின்றன. தமிழனின் தனிப்படைப்பான அக்கார அடிசிலும் பாட்டில் வருகிறது. தமிழ் மொழியிலோ… Continue reading ஒன்பதாம் திருமொழி -1

எட்டாம் திருமொழி – 2

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வர்க்குஎன்னாகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே மின்னல்களை தேகங்களில் கொண்டு வலம் வருகின்ற மேகங்களே! என் தேகம் கொண்டிருக்கிருக்கும் இள மார்பகங்கள் தன் தேகத்தில் திருமகளைக் கொண்டிருக்கும் அந்த அழகிய மார்பனை விரும்பி அணைக்கவேண்டும் என்று தினமும் எனக்கு ஆசை இருப்பதை. வேங்கடத்தின் உறையும் கரும்பொன் போன்ற தேகம் உடையவனான இறைவனுக்குச் சொல்லுங்கள். ஆண்டாளின் மிக, மிக அழகிய பாடல்களில்… Continue reading எட்டாம் திருமொழி – 2

எட்டாம் திருமொழி -1

இடி போல் அதிரும் வலம்புரிச் சங்கம் ஆண்டாளுக்குப் பதிலளிக்கவில்லை. அதன் மௌனத்தை இன்னும் தாங்க முடியாமல் செய்தது அவர் எதிர்கொண்ட மழைகாலம். மின்னல் அவன் கையில் இருக்கும் சக்கரம் போல் மின்னியது. இப்போது மௌனத்தின் பிடியில் இருக்கும் பாஞ்சஜன்யம் தான் முழக்கமிடும் தருணங்களில் ஏற்படுத்தும் அதிர்வை - இடி நினைவூட்டியது. கூடவே கருமேகங்கள். கண்ணனின் வண்ணம் கொண்டவை. அவனைப் போலவே இருப்பதால் அவை சொல்வதை அவன் கேட்பான் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பாடுகிறாள். உலக இலக்கியத்திலேயே மனிதர்கள்… Continue reading எட்டாம் திருமொழி -1