ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திமுகவிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தமிழன் பிரசன்னாவின் மனைவி நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் எப்போதும் போல பல வதந்திகள் உலாவத் துவங்கி விட்டன. என்னைப் பொறுத்தவரை காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு முடிவிற்கு வரும்வரை கூச்சல் போடாமல் அமைதியாக இருப்பதைத்தான் நேர்மையானவர்கள் செய்வார்கள். இது போன்ற சம்பவம் பூணூல் போட்ட பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் சிலர் பெருங்கூத்தாடியிருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.… Continue reading ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்

மிகைப்படுத்துவதை ஒரு கலையாக பல ஆண்டுகள் செய்து கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்றக்கழகக் கோமாளிகள். உதவாக்கரைகளிலிருந்து சிறிது திறமை கொண்டவர்கள் வரை திராவிட இயக்கத்திற்கு கொடி பிடித்தவர்களையும், பெரியாரின் ஹிட்லரிய இனவெறி பிரச்சாரத்திற்கு துணை போனவர்களையும் உலகமகா மேதைகள் போலவும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் போலவும் சித்தரிப்பதில் இவர்களுக்கு ஈடு கிடையாது. இன்று இவர்களுக்கு துணை போகின்றவர்கள் அரையாணா அறிஞர்கள். நேர்மை என்பதைத் துடைத்து விட்டு அலையும் கயவர்கள். கனவு இல்லம் கிடைக்காதா என்ற பேராசையில் மூன்றாம்தர விளம்பரங்கள்… Continue reading திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்

தமிழ்நாடும் தமிழகமும்

தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாடு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்ததற்கு முன்பே தமிழன் அறிந்திருந்தது. தமிழனுக்கு என்றும் பிடித்தமான பெயர் அது. செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாரதி பாடியிருக்கிறான். நாடு என்றாலே தனி நாடு மட்டும்தான் என்ற பொருள் என்றுமே தமிழில் இருந்ததில்லை. எனவே தமிழ்நாடு என்றால் தனிநாடு என்று வலிந்து பொருள் கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று கூச்சல் போடுவது முட்டாள்தனம். அதே போல தமிழகம் என்பதும் தமிழனுக்குப் பிடித்த பெயர்.… Continue reading தமிழ்நாடும் தமிழகமும்

ஒன்றியம் என்றால் என்ன?

பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் மிகைப்படுத்துபவர்களுக்குப் பஞ்சம் இருந்தது கிடையாது. அன்று ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூச்சலை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று திமுக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டது என்ற திமிரில் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு எதிராக இருந்தாலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் 'ஒன்றியம்' என்ற சொல்லை வைத்துக் கொண்டு உளறத் துவங்கி விட்டார்கள். இனி ஒன்றியம் என்ற சொல்லைப் பார்ப்போம். 'ஒன்றியம்' அல்லது Union என்ற… Continue reading ஒன்றியம் என்றால் என்ன?

பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?

பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறித்து திரு சுப்ரமணியன் சுவாமி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் நாட்டின் பிராமணர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது: The targetting of Brahmins in the state and the verbal terrorizing of this hapless disorganized community is very much like as happened during the early period of Nazi government led by Hitler in Germany. நான்… Continue reading பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?

பெருமாள் முருகனின் கவிதை

" பஞ்சமர் என்றீர்கள் சூத்திரர் என்றீர்கள் வேசி மக்கள் என்றீர்கள் வைப்பாட்டி பிள்ளைகள் என்றீர்கள் கீழ்மக்கள் என்றீர்கள் உங்கள் மொழியில் எத்தனை வசவுகள் உங்கள் மொழி நாகரிகமற்றது உங்கள் மொழி ஆபாசமானது உங்கள் மொழி கேவலமானதுஉங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது இன்று என் சகோதரன் கோபக் கணமொன்றில் உங்களை நோக்கி உங்கள் குரைக்கும் தன்மை கண்டு\ ‘நாய், வெறிநாய்’ எனக் குறிப்பிட்டான் உங்கள் மொழி இழிவானது உங்களை நோக்கிக்கூட உங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்… Continue reading பெருமாள் முருகனின் கவிதை

The Joy of Admiring a Ravi Varma

We have in our Delhi flat a small, strange, black & white print of Krishna titled ‘Shri Krishna in Om’. There is nothing remarkable about this print, except that, on the right side of the picture, at the bottom, there is a legend which says: ‘S S Brijbasi & Sons, Bunder Road, Karachi.’ On the… Continue reading The Joy of Admiring a Ravi Varma