கரித்துண்டும் பானையோடுகளும்
நான் கரித்துண்டின் காலத்தை பானையோடுகளுக்கு மேல் ஏற்றக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். என் நண்பர்கள் சிலர் உங்கள் வாதம் தெளிவாக இல்லை, இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள். சரி, தமிழக ஊடகவியலாளர்களுக்கும், மார்க்சிய பேரொளிகளுக்கும் கூடப் புரிகின்றபடி விளக்க முயல்கிறேன். மக்கள் புழங்கும் எந்த இடத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ரங்கநாதன் தெரு, தி நகர். அத்தெருவில் நடப்பவர்கள் வயது ஒரே மாதிரி இருக்குமா? 90 வயது கிழவர்களும் இருக்கலாம்.… Continue reading கரித்துண்டும் பானையோடுகளும்
திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?
பெரியாரியர்களை நாசிகள் என்று நான் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! திராவிட இயக்கத்தினர் ஹிட்லர் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்: "செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மானியரிடம். ஆதிக்கம் அவர்களிடம். அடிமைத்தனம் ஜெர்மானியரிடம். ஆனந்தம் அவர்களிடம். சோர்வு ஜெர்மானியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தனது சுயசரிதையில் எழுதினார்.… Continue reading திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?
Is Keeladi a Place of Magic?
THIS IS IMPORTANT. PLEASE READ CAREFULLY. I wanted to stay away from Keeladi for a few days but fate has decided otherwise! There is a detailed article on Keeladi in Frontline written by Mr Sivanandam and Sundar Ganesan. I have given the link below. The article says this: "The stratigraphy of all the trenches at… Continue reading Is Keeladi a Place of Magic?
அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?
தேனீக்கூடு! நான் கீழடியைப் பற்றி எழுதியிருப்பவையும் பேசியிருப்பவையும் தேனீக்கூட்டைக் கலைத்து விட்டன. பல தேனீகள் என்னையும் என்னை ஆதரிப்பவர்களையும் கொட்டுவதற்குப் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை -கீழடியின் முதல் இரண்டு கட்டங்களையும் ஆராய்ந்த திரு அமர்நாத் உட்பட. நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நான் அவர்கள் நான் சொன்னதாகச் சொல்லுபவை நான் சொன்னவற்றிற்கு நேர் எதிரானவை! எலும்புக் கூடுகள்! நான் கீழடியில் எலும்புக் கூடுகள் கிடைக்கவில்லை என்று… Continue reading அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?
கீழடி விவாதம் – புதிய தலைமுறை
நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி
நேற்று நடந்த விவாதத்தில் நான் திரு வெங்கடேசனைக் குறை சொல்ல மாட்டேன். அவர் அரசியல்வாதி. கீழடி அரசியல் அவருக்குப் பிழைப்பு. ஆனால் ராஜவேலு அவர்கள் தொல்லியல் துறையில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவர் பேச்சுத்தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கரிமப்பகுப்பாய்வு பற்றிய இப்படி ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்? நான் என்னுடைய வாதத்தை மறுபடியும் தெளிவாக வைக்கிறேன். 1. கீழடியில் பகுப்பாய்வு செய்யப்பட்டது கரித்துண்டு. கரித்துண்டின் வயது என்ன என்பதுதான் கண்டறியப்பட்டது.… Continue reading நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி
பிராமி – சில கேள்விகள்
பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன - சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள்.… Continue reading பிராமி – சில கேள்விகள்
Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India
My article in the Outlook Magazine which has come out with a special issue on Gandhi and Dissent. https://www.outlookindia.com/magazine/story/india-news-periyar-ev-ramasamy-the-man-who-opposed-mahatma-gandhis-idea-of-india/302169 Periyar E.V. Ramasamy must easily be one of the most controversial political personalities of 20th-century India. A people’s man, he spent the last 50 years of his long life practically on the move, haranguing at street… Continue reading Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India
கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?
கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன்… Continue reading கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?