கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்டு முன்னூறு வருடங்களுக்குள்தான் இருக்கும். அப்போது கோவிலுக்கு முன்னால் இருந்த சன்னிதித் தெருவில் ராயர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். ஆனால் 'தின்னு கெட்டான் திருநெல்வேலி ராயன்' என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் சாப்பிட்டே தங்கள் சொத்துக்களை அழித்து விட்டார்களாம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராயர்கள் வீடுகளை எல்லாம் சுமார்த்த, வைஷ்ணவ பிராமணர்கள் வாங்கி விட்டார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தெரு முழுவதும் வழக்கறிஞர்கள், பிராமண நிலச்சுவான்தார்கள், ஒன்றிரண்டு வீடுகளில் கோவிலில் பெருமாளுக்குச்… Continue reading கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!

மாலே மணிவண்ணா!

வைணவ உரையாசிரியர்களைப் படிப்பது என்பது மிகவும் கடினமானது. வடமொழிப் பயிற்சி இருந்தால் ஒழிய அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிவது கடினம். இதைத் தவிர இன்னொரு பிரச்சினையும் எனக்கு இருந்தது. சொன்னவற்றையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு புத்தகத்தில் மதநூல்களுக்கு உரை எழுதுவது embroidering a piece of rag போன்றது என்று படித்தேன். அதாவது கந்தல் துணியில் பின்னல் வேலை செய்வது.  இதை என்… Continue reading மாலே மணிவண்ணா!

ஒருத்தி மகனாய் பிறந்து!

நேற்று தமிழ் இலக்கியத்தில் கண்ணன் எவ்வாறு பேசப்படுகிறான் என்பதைப் பார்த்தோம். இன்று சமஸ்கிருத நூல்களில் கண்ணனைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். முதன்முதலாக கிருஷ்ணனின் பெயர் சாந்தோக்கிய உபநிஷதத்தில் வருகிறது. அவன் தேவகியின் புதல்வன் என்று குறிப்பிடப்படுகிறான். பாணினியின் அஷ்டத்யாயி வாசுதேவனும் கிருஷ்ணனும் வழிபடப்படுவதைச் சொல்கிறது. பதஞ்சலி தன்னுடைய அஷ்டத்யாயி உரையில் கம்சனைக் கண்ணன் கொன்ற கதையைக் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தின் கண்ணனையும், கீதை உபதேசம் செய்த கிருஷ்ணனையும் நமக்கு நன்றாகத் தெரியும். மகாபாரத்திற்குப் பின்னால் எழுதப்பட்ட… Continue reading ஒருத்தி மகனாய் பிறந்து!

அன்றிவ் வுலகம் அளந்தாய்!

தமிழருக்கும் கண்ணனுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு இருக்கிறது. உதாரணமாக 'வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை/ அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்/ மரம் செல மிதித்த மாஅல் போல' என்று அகநானூறு பேசுகிறது. யமுனை (தொழுனை)க் கரையில் மரத்தழைகளை ஆய்ச்சியர் கட்டிக் கொள்ள கிளையை வளைத்து கண்ணன் (மாஅல்) கொடுத்தான் என்கிறது. இதே போல, 'மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை/ வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்/ மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு'… Continue reading அன்றிவ் வுலகம் அளந்தாய்!

மாரிமலை முழைஞ்சில்!

தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை புலியை விட சிங்கம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது. ஆண்டாள் விதிவிலக்கல்ல. அவள் இவ்வொப்பற்ற பாடலில் சிங்கத்திற்காக நாலரை அடிகளை ஒதுக்கியிருக்கிறார். ஆண்டாள் சிங்கத்தைப் பார்த்திருக்க முடியுமா? அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சமீபத்தில் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காடுகள் இருந்த/இருக்கின்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் புலிகளும் சிங்கங்களும் ஒரே பரப்பில் இருக்கவே முடியாது என்றும் கூறி விடலாம். சிங்கஙகளுக்கு புல்வெளிகள், ஒரு சில மரங்களே… Continue reading மாரிமலை முழைஞ்சில்!

அங்கண்மா ஞாலத்து!

உலகம் அழகியது. பெரியது. அது தரும் இன்பங்கள் அளவிறந்தாக இருக்கலாம். ஆனால் தனியாக ஒருவர் எவ்வளவு அனுபவித்தாலும், எவ்வளவுதான் தனக்காகச் சேர்ந்தாலும் கடைசியில் தன்னை அறிவதுதான் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது. ஆண்டாளின் 'அங்கண்மா ஞாலத்து' தன்னை அறிந்து அகங்காரத்தை அழிப்பது பற்றிய பாடல் என்பார் என் தந்தை. தன்னை எப்படி அறிவது? நம்மாழ்வார் சொல்கிறார்: யானே என்னை  அறியகிலாதே,/ யானே என் தனதே  என்று இருந்தேன்,/யானே நீ  என் உடைமையும் நீயே,/ வானே ஏத்தும் எம் வானவர் ஏறே. யானே நீ… Continue reading அங்கண்மா ஞாலத்து!

ஏற்ற கலங்கள்!

ஆண்டாளை ஏன் அப்படியே படிக்கக் கூடாது? தெரியாத வார்த்தைகளை அகராதியில் தேடிக் கொண்டு அவள் என்ன சொல்கிறாள் எனபதை அவளுடைய வார்த்தைகளிலிருந்தே ஏன் புரிந்து கொள்ள முடியாது? நிச்சயம் படிக்கலாம். புரிந்து கொள்ளலாம். இதே கேள்வியை என் தந்தையிடம் நான் கேட்டேன். அவர் ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது அவளுக்குச் செய்யும் அவமானம் என்று சொன்னார். 'ஆனால் நான் சொல்வது வைஷ்ணவர்களுக்கு. உன்னைப் போலக் கம்யூனிஸ்டு கழுதைகளுக்கு அல்ல' என்றார். மேலும் சொன்னார்: 'கம்பன் சீதைக்கு தோழியர்… Continue reading ஏற்ற கலங்கள்!

முப்பத்து மூவர்!

நம் வாழ்க்கையில் தினமும் புழங்கும் கண்ணாடி, நம்மை நாமே பார்த்து மகிழ்ந்து கொள்ளும் (அல்லது கவலைப்படும்) கண்ணாடி மனித வாழ்வில் எப்போது வந்தது? மனிதன் தன்னுடைய உருவத்தைத் தண்ணீரில் பார்த்துக் கொள்வது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். உலோகங்களை அவன் பயன்படுத்த துவங்கிய காலத்திலேயே நன்றாக சுத்தம் செய்யப் பட்ட உலோகங்களில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். உலோகக் கண்ணாடி 6000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே துருக்கியில் இருந்தது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். நன்றாகப் பிரதிபலிக்கும் உலோகக்… Continue reading முப்பத்து மூவர்!

குத்து விளக்கெரிய!

தமிழ் இலக்கிய மரபின்படி பெண்களின் பருவங்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. "ஐந்து முதல்ஏழ் ஆண்டும் பேதை; /எட்டு முதல்நான்கு ஆண்டும் பெதும்பை;/ ஆறிரண்டு ஒன்றே ஆகும் மங்கை; /பதினான்கு ஆதிபத் தொன்பான் காறும்/ எதிர்தரும் மடந்தை; மேல் ஆறும் அரிவை. /ஆறுதலை யிட்ட இருபதின் மேல்ஓர்/ ஆறும் தெரிவை; எண் ணைந்துபே ரிளம்பெண் என்று/ ஓரும் பருவத் தோர்க்குஉரைத் தனரே." என்று இலக்கண விளக்கம் கூறுகிறது. 5-7 பேதை; 8-12 பெதும்பை; 13 மங்கை; 14-19 மடந்தை; 20-26 அரிவை; 27-32… Continue reading குத்து விளக்கெரிய!

உந்து மதகளிற்றன்!

யார் இந்த நப்பின்னை? ஆழ்வார்களில் ஒன்பது ஆழ்வார்கள் நப்பின்னையைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். 'ஒருமகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும்' என்று திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். 'பூமகள், மண்மகள், ஆய்மகள்' என்று நம்மாழ்வாரும் பாடியிருக்கிறார். அவர்கள் ஆயர் மடந்தை, ஆய்மகள் என்று சொல்வது நப்பின்னையைத்தான் என்பது தெளிவு. திருமாலுக்கு திருமகள், பூமகள் போன்றே மூன்றாவது மனைவியாக நப்பின்னை இருக்கிறார். வடமொழி ஹரி வம்சம் நூலில் அவர் நீளாதேவியாக வருகிறார். கண்ணன் ஏழு ஏறுகளை வென்று அவளை மணமகளாக… Continue reading உந்து மதகளிற்றன்!