காலச்சுவடு நவம்பர் இதழில் திரு சிவானந்தம் மற்றும் திரு சுந்தர் கணேசன் எழுதிய "கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று" என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இது அரசு தொல்லியல் துறை சார்பில் எழுதிய கட்டுரை என்பதும் தெளிவாக கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து தெரிந்தது. கட்டுரை தொடர்பாக எனக்குச் சில கேள்விகள் இருந்தன. அவற்றை நான் காலச்சுவடு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது என் கடிதம்: எட்டு கேள்விகள் அன்புள்ள கண்ணன், சுகுமாரன், இக்கேள்விகள் திரு சிவானந்தம் சுந்தர் கணேசன்… Continue reading கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்
Category: Keeladi – கீழடி
பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை: பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின்… Continue reading பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!
(சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. தினமலர் வெளியிடும் 'பட்டம்' இதழில் 4 நவம்பர் 2019ல் வந்தது) நம் எல்லோருக்கும் பூமிக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிய நிச்சயம் ஆர்வம் இருக்கும். மர்மக்கதைகள் படிப்பவர்களுக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கலாம் என்று தோன்றும். சிலருக்கு புதையல் கிடைக்கும் என்ற ஆசை இருக்கும். நீங்களும் தோண்டிப் பார்க்கலாம். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு தோண்டிப் பார்க்கலாம். தோண்டும் போது என்ன கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது. நான் சிறுவனாக இருக்கும் போது… Continue reading தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!
கரித்துண்டும் பானையோடுகளும்
நான் கரித்துண்டின் காலத்தை பானையோடுகளுக்கு மேல் ஏற்றக்கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். என் நண்பர்கள் சிலர் உங்கள் வாதம் தெளிவாக இல்லை, இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள். சரி, தமிழக ஊடகவியலாளர்களுக்கும், மார்க்சிய பேரொளிகளுக்கும் கூடப் புரிகின்றபடி விளக்க முயல்கிறேன். மக்கள் புழங்கும் எந்த இடத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ரங்கநாதன் தெரு, தி நகர். அத்தெருவில் நடப்பவர்கள் வயது ஒரே மாதிரி இருக்குமா? 90 வயது கிழவர்களும் இருக்கலாம்.… Continue reading கரித்துண்டும் பானையோடுகளும்
Is Keeladi a Place of Magic?
THIS IS IMPORTANT. PLEASE READ CAREFULLY. I wanted to stay away from Keeladi for a few days but fate has decided otherwise! There is a detailed article on Keeladi in Frontline written by Mr Sivanandam and Sundar Ganesan. I have given the link below. The article says this: "The stratigraphy of all the trenches at… Continue reading Is Keeladi a Place of Magic?
அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?
தேனீக்கூடு! நான் கீழடியைப் பற்றி எழுதியிருப்பவையும் பேசியிருப்பவையும் தேனீக்கூட்டைக் கலைத்து விட்டன. பல தேனீகள் என்னையும் என்னை ஆதரிப்பவர்களையும் கொட்டுவதற்குப் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை -கீழடியின் முதல் இரண்டு கட்டங்களையும் ஆராய்ந்த திரு அமர்நாத் உட்பட. நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நான் அவர்கள் நான் சொன்னதாகச் சொல்லுபவை நான் சொன்னவற்றிற்கு நேர் எதிரானவை! எலும்புக் கூடுகள்! நான் கீழடியில் எலும்புக் கூடுகள் கிடைக்கவில்லை என்று… Continue reading அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?
கீழடி விவாதம் – புதிய தலைமுறை
நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி
நேற்று நடந்த விவாதத்தில் நான் திரு வெங்கடேசனைக் குறை சொல்ல மாட்டேன். அவர் அரசியல்வாதி. கீழடி அரசியல் அவருக்குப் பிழைப்பு. ஆனால் ராஜவேலு அவர்கள் தொல்லியல் துறையில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவர் பேச்சுத்தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கரிமப்பகுப்பாய்வு பற்றிய இப்படி ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்? நான் என்னுடைய வாதத்தை மறுபடியும் தெளிவாக வைக்கிறேன். 1. கீழடியில் பகுப்பாய்வு செய்யப்பட்டது கரித்துண்டு. கரித்துண்டின் வயது என்ன என்பதுதான் கண்டறியப்பட்டது.… Continue reading நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி
பிராமி – சில கேள்விகள்
பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன - சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள்.… Continue reading பிராமி – சில கேள்விகள்
கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?
கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன்… Continue reading கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?